Tuesday, April 29, 2008

Feelings of India

எங்கே நான் போனாலும்
என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே..

மரணம் தான் வந்தாலும்
பூச்சண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து
இறப்பேன் பெண்ணே...

தொட்டு தொட்டு என்னை
வெற்று களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ...

ஆறுதல் - Positive Look

இப்ப இது அ(ஆ)ப்புரசில் நேரம்.. இப்படி தான் தலைப்பு போட வேண்டி இருக்குது.. என்ன பண்ணுறது... என்னோட எல்லா பதிவையும் படிக்கும் போது.. தெரியும்.. நான் எவ்ளோ பொறுமைசாலின்னு... இப்படி தான் இந்த வருசமும்... அ(ஆ)ப்புரசில் பக்கத்த ஓப்பன் பண்ணி வச்சு... அய்யோடா என்ன பண்ணுறது.. என்ன போட்டாலும் ஒண்ணும் ஒப்பேர போறதில்ல.. அப்படின்னு... வழக்கம் போல எதாவது திட்டி எழுதலாம்னு கன்னத்துல கைய்ய வச்சுட்டு உட்காருந்தேன்... அப்ப பாத்து என்னோட கூட வேலை பாக்குறவன் வந்து... மருது... என்னதான் ஒண்ணுமே சரி இல்லன்னாலும்... எவ்ளோ கஷ்டத்துலயும்.. positive look இருக்கதுறது தான் நல்லது... அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான்... அதுக்கு அப்புறம் உட்காந்து யோசிச்ச.. அஹா இப்படி வேற இருக்கா... அப்படின்னு அ(ஆ)ப்புரசில் முடிசிட்டேன்... பொதுவா அ(ஆ)ப்புரசில் முடிச்ச உடனே நம்ம மேனேஜர்-ஏ பாத்து கோபம் வரும்... முதல் முறைய எனக்கு ஒரு confidence வந்துச்சு.....

இத மாதிரி தான்... பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் போது.. எனக்கு கொஞ்சம் கணக்கு நல்ல வரும்... ஹலோ அந்த கணக்கு இல்ல.... நான் சொல்லுறது கணக்கு பாடம்.... அத நம்பி தான் என்னோட பொறியியல் கல்லூரி கனவே இருந்துச்சு... நான் chemistry ல கொஞ்சம் வீக்... ஆமா ரெண்டு chemistry யும் தான்... முதல் நாள் chemistry க்கு நைட் பகல்னு பாரமா படிச்சுட்டு.... (எவ்ளோ தான் படிச்சாலும் அது ஊத்திருச்சு).. மறுநாள் கணக்கு பரிட்சை... மறுநாள் பன்னிரண்டு மணிக்கே தூக்கம் வந்துருச்சு... இன்னும் ஒரு மூணு chapter நான் ரிவைஸ் பண்ணவே இல்ல.... சரி காலையில எழுந்து படிக்கலாம் னு.. அம்மாவ என்னை ஐந்து மணிக்கு எழுப்ப சொன்னேன்... அம்மா என்னை எழுப்புனது ஏழு மணிக்கு.... ஒரே அடம்... அழுகை.. என்னோட கனவு எல்லாம் போச்சுன்னு... நான் இன்னிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு... அப்ப எங்க அம்மா... "ஒண்ணும் கவலை படாத ராசா... நான் தப்பு பண்ணிட்டேன்... நீ மார்க் கம்மி எடுத்தாலும்... பரவ இல்ல.. நான் உன்னை காசு குடுத்து படிக்க போடுறன்..." அப்படின்னு அனுப்பி வச்சாங்க... ஒரே முகம் வீங்கி பரிட்சை எழுத போனேன்... போன... அங்க ஒரே தெரிஞ்ச கணக்கா வந்து அதுல நூறு சதவீத மார்க் எடுதுட்டன்... எனக்கும் அப்ப தெரியும் எங்க வீட்டுல என்னை காசு குடுத்து படிக்க போட முடியாதுன்னு... ஆனாலும் அந்த பொய்யே நம்பி... அந்த ஆறுதல் வார்த்தை என்னோட வாழ்க்கைய மாத்திரிச்சு...

பொய் சில நேரங்களில் அழகு.... வாழ்க்கை திசை மாற்றி...

Monday, April 14, 2008

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

என்னதான் அரசு இனிமே தமிழ் புத்தாண்டு தை மாசம்னு சொன்னாலும்... நம்மளுக்கு எல்லாம் எப்பவுமே சித்திரை மாசம் தான் புத்தாண்டு... யாரே கேட்டு இப்படி எல்லாம் பண்ணுறாங்கன்னு தெரியல... ஊர்ல பல பிரச்சனை இருக்கும் போது இவங்களுக்கு இதுக்கும் மட்டும் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ... இது மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது...

வழக்கம் போல இன்று எல்லா கோவிலும் நிரம்பி வழிந்திருக்கும்... நானும் போனேன்... சரி இன்னும் எவ்ளோ நாள் இந்த சிகாகோ ல இருப்பன்னு தெரியாது... போயி அரோரா பாலாஜி கோவிலுக்கு போயி நல்ல பொண்ணா பாத்து கொடு.. அப்படின்னு வேண்டிட்டு... போயி நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நெனைச்சு போனேன்...

போனால் இன்னைக்கு எதோ முருகன் கல்யாணம் நடந்துட்டு இருத்துச்சு.... அப்படியே பக்தி பரவசதுல... பாத்திட்டு இருந்தேன்... சத்தியமா... நம்புங்க... அப்போது பாத்து பக்கத்துல இருந்தவரு... என்ன விசேசம் அப்படின்னு கேட்டாரு... நான் ஒரு முழி முழிச்சிட்டு... எதாவது முருகன் திருக்கல்யாணம் இருக்கும்... அப்படி இல்லன்னா... தைப்புசமா இருக்கும் அப்படின்னு உளறி விட்டான்... அந்தாளு நம்மள ஒரு மொற விட்டாரு... அஹா மாட்டிக்கிட்ட மருதுன்னு.... எஸ்கேப் அயிட்டனே...

நீங்களே சொல்லுங்க... புது வருஷம் தை மாதம் வரும் பொழுது... தை புசம் சித்திரைல வரக்கொடதா?...

நம்மள யாராலும் ஏமாத்த முடியாது!!!!! ஆமா!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!

Video Testing Enjoy