
Friday, June 20, 2008
Saturday, June 14, 2008
தசாவதாரம் - ஒரு பார்வை
முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதினால் என்ன அப்படின்னு தோணி... எழுதுறேன்.. நல்ல எல்லாம் தெரிஞ்சவங்க தான் விமர்சனம் எழுத முடியும்... அதனால இது ஒரு பார்வை தான்.. நல்ல பார்வையா? இல்ல நொள்ள பார்வையன்னு நீங்க தான் பார்த்து சொல்லணும்...
கமலுடைய உழைப்பு நிறையவே தெரிகிறது படத்தில். எல்லாமே கமல் தான் போல... ஒரு கடினமான கதையை சாதரண மக்களுக்கு புரிகின்ற மாதிரி எடுத்ததுக்கு பாராட்ட வேண்டும். அப்புறம் அவரோட பத்து வேடங்களும் அருமை. ஆனால் அது தான் பிரச்சனையே. எல்லாம் முக முடி போட்டு விட்டு வந்த மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் பத்து வேடம் அதிகம் தான். It is distracting from the main story.
கமல் சார் உங்களுக்கு பிரமாண்டம் வேண்டாம்.. உங்களோட நடிப்பு திறமை போதும்... அது பிரமாண்டத்துக்கு பிரமாண்டம்...
தசாவதாரம் இன்னும் ஒரு ஆளவந்தான்.. முக மூடி கொள்ளைக்காரன்.
கமலுடைய உழைப்பு நிறையவே தெரிகிறது படத்தில். எல்லாமே கமல் தான் போல... ஒரு கடினமான கதையை சாதரண மக்களுக்கு புரிகின்ற மாதிரி எடுத்ததுக்கு பாராட்ட வேண்டும். அப்புறம் அவரோட பத்து வேடங்களும் அருமை. ஆனால் அது தான் பிரச்சனையே. எல்லாம் முக முடி போட்டு விட்டு வந்த மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் பத்து வேடம் அதிகம் தான். It is distracting from the main story.
கமல் சார் உங்களுக்கு பிரமாண்டம் வேண்டாம்.. உங்களோட நடிப்பு திறமை போதும்... அது பிரமாண்டத்துக்கு பிரமாண்டம்...
தசாவதாரம் இன்னும் ஒரு ஆளவந்தான்.. முக மூடி கொள்ளைக்காரன்.
Tuesday, April 29, 2008
Feelings of India
எங்கே நான் போனாலும்
என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே..
மரணம் தான் வந்தாலும்
பூச்சண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து
இறப்பேன் பெண்ணே...
தொட்டு தொட்டு என்னை
வெற்று களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ...
என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே..
மரணம் தான் வந்தாலும்
பூச்சண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து
இறப்பேன் பெண்ணே...
தொட்டு தொட்டு என்னை
வெற்று களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ...
ஆறுதல் - Positive Look
இப்ப இது அ(ஆ)ப்புரசில் நேரம்.. இப்படி தான் தலைப்பு போட வேண்டி இருக்குது.. என்ன பண்ணுறது... என்னோட எல்லா பதிவையும் படிக்கும் போது.. தெரியும்.. நான் எவ்ளோ பொறுமைசாலின்னு... இப்படி தான் இந்த வருசமும்... அ(ஆ)ப்புரசில் பக்கத்த ஓப்பன் பண்ணி வச்சு... அய்யோடா என்ன பண்ணுறது.. என்ன போட்டாலும் ஒண்ணும் ஒப்பேர போறதில்ல.. அப்படின்னு... வழக்கம் போல எதாவது திட்டி எழுதலாம்னு கன்னத்துல கைய்ய வச்சுட்டு உட்காருந்தேன்... அப்ப பாத்து என்னோட கூட வேலை பாக்குறவன் வந்து... மருது... என்னதான் ஒண்ணுமே சரி இல்லன்னாலும்... எவ்ளோ கஷ்டத்துலயும்.. positive look இருக்கதுறது தான் நல்லது... அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான்... அதுக்கு அப்புறம் உட்காந்து யோசிச்ச.. அஹா இப்படி வேற இருக்கா... அப்படின்னு அ(ஆ)ப்புரசில் முடிசிட்டேன்... பொதுவா அ(ஆ)ப்புரசில் முடிச்ச உடனே நம்ம மேனேஜர்-ஏ பாத்து கோபம் வரும்... முதல் முறைய எனக்கு ஒரு confidence வந்துச்சு.....
இத மாதிரி தான்... பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் போது.. எனக்கு கொஞ்சம் கணக்கு நல்ல வரும்... ஹலோ அந்த கணக்கு இல்ல.... நான் சொல்லுறது கணக்கு பாடம்.... அத நம்பி தான் என்னோட பொறியியல் கல்லூரி கனவே இருந்துச்சு... நான் chemistry ல கொஞ்சம் வீக்... ஆமா ரெண்டு chemistry யும் தான்... முதல் நாள் chemistry க்கு நைட் பகல்னு பாரமா படிச்சுட்டு.... (எவ்ளோ தான் படிச்சாலும் அது ஊத்திருச்சு).. மறுநாள் கணக்கு பரிட்சை... மறுநாள் பன்னிரண்டு மணிக்கே தூக்கம் வந்துருச்சு... இன்னும் ஒரு மூணு chapter நான் ரிவைஸ் பண்ணவே இல்ல.... சரி காலையில எழுந்து படிக்கலாம் னு.. அம்மாவ என்னை ஐந்து மணிக்கு எழுப்ப சொன்னேன்... அம்மா என்னை எழுப்புனது ஏழு மணிக்கு.... ஒரே அடம்... அழுகை.. என்னோட கனவு எல்லாம் போச்சுன்னு... நான் இன்னிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு... அப்ப எங்க அம்மா... "ஒண்ணும் கவலை படாத ராசா... நான் தப்பு பண்ணிட்டேன்... நீ மார்க் கம்மி எடுத்தாலும்... பரவ இல்ல.. நான் உன்னை காசு குடுத்து படிக்க போடுறன்..." அப்படின்னு அனுப்பி வச்சாங்க... ஒரே முகம் வீங்கி பரிட்சை எழுத போனேன்... போன... அங்க ஒரே தெரிஞ்ச கணக்கா வந்து அதுல நூறு சதவீத மார்க் எடுதுட்டன்... எனக்கும் அப்ப தெரியும் எங்க வீட்டுல என்னை காசு குடுத்து படிக்க போட முடியாதுன்னு... ஆனாலும் அந்த பொய்யே நம்பி... அந்த ஆறுதல் வார்த்தை என்னோட வாழ்க்கைய மாத்திரிச்சு...
பொய் சில நேரங்களில் அழகு.... வாழ்க்கை திசை மாற்றி...
இத மாதிரி தான்... பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் போது.. எனக்கு கொஞ்சம் கணக்கு நல்ல வரும்... ஹலோ அந்த கணக்கு இல்ல.... நான் சொல்லுறது கணக்கு பாடம்.... அத நம்பி தான் என்னோட பொறியியல் கல்லூரி கனவே இருந்துச்சு... நான் chemistry ல கொஞ்சம் வீக்... ஆமா ரெண்டு chemistry யும் தான்... முதல் நாள் chemistry க்கு நைட் பகல்னு பாரமா படிச்சுட்டு.... (எவ்ளோ தான் படிச்சாலும் அது ஊத்திருச்சு).. மறுநாள் கணக்கு பரிட்சை... மறுநாள் பன்னிரண்டு மணிக்கே தூக்கம் வந்துருச்சு... இன்னும் ஒரு மூணு chapter நான் ரிவைஸ் பண்ணவே இல்ல.... சரி காலையில எழுந்து படிக்கலாம் னு.. அம்மாவ என்னை ஐந்து மணிக்கு எழுப்ப சொன்னேன்... அம்மா என்னை எழுப்புனது ஏழு மணிக்கு.... ஒரே அடம்... அழுகை.. என்னோட கனவு எல்லாம் போச்சுன்னு... நான் இன்னிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு... அப்ப எங்க அம்மா... "ஒண்ணும் கவலை படாத ராசா... நான் தப்பு பண்ணிட்டேன்... நீ மார்க் கம்மி எடுத்தாலும்... பரவ இல்ல.. நான் உன்னை காசு குடுத்து படிக்க போடுறன்..." அப்படின்னு அனுப்பி வச்சாங்க... ஒரே முகம் வீங்கி பரிட்சை எழுத போனேன்... போன... அங்க ஒரே தெரிஞ்ச கணக்கா வந்து அதுல நூறு சதவீத மார்க் எடுதுட்டன்... எனக்கும் அப்ப தெரியும் எங்க வீட்டுல என்னை காசு குடுத்து படிக்க போட முடியாதுன்னு... ஆனாலும் அந்த பொய்யே நம்பி... அந்த ஆறுதல் வார்த்தை என்னோட வாழ்க்கைய மாத்திரிச்சு...
பொய் சில நேரங்களில் அழகு.... வாழ்க்கை திசை மாற்றி...
Monday, April 14, 2008
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்னதான் அரசு இனிமே தமிழ் புத்தாண்டு தை மாசம்னு சொன்னாலும்... நம்மளுக்கு எல்லாம் எப்பவுமே சித்திரை மாசம் தான் புத்தாண்டு... யாரே கேட்டு இப்படி எல்லாம் பண்ணுறாங்கன்னு தெரியல... ஊர்ல பல பிரச்சனை இருக்கும் போது இவங்களுக்கு இதுக்கும் மட்டும் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ... இது மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது...
வழக்கம் போல இன்று எல்லா கோவிலும் நிரம்பி வழிந்திருக்கும்... நானும் போனேன்... சரி இன்னும் எவ்ளோ நாள் இந்த சிகாகோ ல இருப்பன்னு தெரியாது... போயி அரோரா பாலாஜி கோவிலுக்கு போயி நல்ல பொண்ணா பாத்து கொடு.. அப்படின்னு வேண்டிட்டு... போயி நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நெனைச்சு போனேன்...
போனால் இன்னைக்கு எதோ முருகன் கல்யாணம் நடந்துட்டு இருத்துச்சு.... அப்படியே பக்தி பரவசதுல... பாத்திட்டு இருந்தேன்... சத்தியமா... நம்புங்க... அப்போது பாத்து பக்கத்துல இருந்தவரு... என்ன விசேசம் அப்படின்னு கேட்டாரு... நான் ஒரு முழி முழிச்சிட்டு... எதாவது முருகன் திருக்கல்யாணம் இருக்கும்... அப்படி இல்லன்னா... தைப்புசமா இருக்கும் அப்படின்னு உளறி விட்டான்... அந்தாளு நம்மள ஒரு மொற விட்டாரு... அஹா மாட்டிக்கிட்ட மருதுன்னு.... எஸ்கேப் அயிட்டனே...
நீங்களே சொல்லுங்க... புது வருஷம் தை மாதம் வரும் பொழுது... தை புசம் சித்திரைல வரக்கொடதா?...
நம்மள யாராலும் ஏமாத்த முடியாது!!!!! ஆமா!!!!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!
Video Testing Enjoy
வழக்கம் போல இன்று எல்லா கோவிலும் நிரம்பி வழிந்திருக்கும்... நானும் போனேன்... சரி இன்னும் எவ்ளோ நாள் இந்த சிகாகோ ல இருப்பன்னு தெரியாது... போயி அரோரா பாலாஜி கோவிலுக்கு போயி நல்ல பொண்ணா பாத்து கொடு.. அப்படின்னு வேண்டிட்டு... போயி நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நெனைச்சு போனேன்...
போனால் இன்னைக்கு எதோ முருகன் கல்யாணம் நடந்துட்டு இருத்துச்சு.... அப்படியே பக்தி பரவசதுல... பாத்திட்டு இருந்தேன்... சத்தியமா... நம்புங்க... அப்போது பாத்து பக்கத்துல இருந்தவரு... என்ன விசேசம் அப்படின்னு கேட்டாரு... நான் ஒரு முழி முழிச்சிட்டு... எதாவது முருகன் திருக்கல்யாணம் இருக்கும்... அப்படி இல்லன்னா... தைப்புசமா இருக்கும் அப்படின்னு உளறி விட்டான்... அந்தாளு நம்மள ஒரு மொற விட்டாரு... அஹா மாட்டிக்கிட்ட மருதுன்னு.... எஸ்கேப் அயிட்டனே...
நீங்களே சொல்லுங்க... புது வருஷம் தை மாதம் வரும் பொழுது... தை புசம் சித்திரைல வரக்கொடதா?...
நம்மள யாராலும் ஏமாத்த முடியாது!!!!! ஆமா!!!!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!
Video Testing Enjoy
Sunday, April 06, 2008
Thursday, March 27, 2008
Monday, March 24, 2008
ஏய் நானும் ரவுடி தான்
இந்த பதிவு பொங்கலுக்கு போட வேண்டியது.. நான் பயங்கர சோம்பேறி ஆயிட்டேன்... என்ன பண்ணுவது.. ஆளாளுக்கு ரூம் போட்டு அடிக்கிறாங்க... ம்ம்ம்.. அத விடுங்க...
அந்த காலத்துல... 1947 ல... ச்சே... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... பயந்துராதீங்க.... பொங்கல் அப்படின்னா எங்க ஊரில் போட்டியெல்லாம் நடத்துவாங்க... நம்ம வழக்கம் போல அதுக்கெல்லாம் கலந்து கொள்ளுவது இல்ல... ஒரு கரும்பா தின்னுட்டு... போயி வேடிக்கை மட்டும் பாக்குறது... இல்ல ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் போயி மாலை நேர படம் பாத்துட்டு... ஒரு முறுக்கு சாப்பிட்டு.. பொங்கல முடிச்சிருவேன்...
நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது... வந்தது எல்லா வினையும்... தாய் பிள்ளையா பழகுன எல்லோரும் எதிரி ஆயிட்டாங்க... எல்லாம் இந்த பணம், ஆட்சி, அதிகாரம் பண்ணுற வேலை... அப்ப கொஞ்சம் நம்மளுக்கு தெனாவட்டு அதிகம்.. என்னடா நம்மள யாரும் கெட்ட பய்யன்னு சொல்ல மட்டேன்கிறானுக.. அப்படின்னு ஒரு எண்ணம்... கெட்ட பேரு வாங்கனும்னு பயங்கர துடிப்பு ...
அப்படித்தான் போயி கபடி பார்க்க போயிருந்தேன்... அப்ப பார்த்து யாரோ நம்ம சாதிக்காரனை அடிக்கறதா சொல்ல.. அஹா இது தாண்டா வாய்ப்புன்னு போனா... அது அவனுங்க குடும்ப சண்டை.... சரின்னு கிளம்பினால்... அதுல ஒருத்தன்... எங்க ஜாதிய பத்தி சொல்ல.. ஒரு U-Turn போடுறதுக்குள்ள.... எல்லோரும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... டேய் ... விடுங்க... நானும் அடிக்கலாம்னு பார்த்தா... பெரிய கும்பல் சேர்ந்துருசு... தனியா ஒருத்தன மாட்டினான்.. ஒரு கட்டைய எடுத்து ஒங்கினேன்... பின்னாடி இருந்து ஒரு கை.. என்ன பிடிச்சு இழுத்து போகுது... வேற யாரு எங்க அம்மா தான்... எல்லோரும் என்னையே பாக்குறாங்க... கையில பெரிய கட்டை..
மாலையில சட்டி போலீஸ் வந்து ஊரே ஒரு ரனகலமா ஆயிருச்சு... எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்து... என்னை வேற ஊருக்கு போக சொன்னாங்க... எல்லோரும் நான் அடிக்கறதா பாத்திட்டங்க... இல்ல இல்ல... அடிக்க போனத... என்ன பண்ணுறது... அடிக்க போனதுக்கு என்னை மூன்று நாட்களுக்கு ஊர் கடத்திட்டாங்க... ஹ்ம்ம் நம்ம ரவுடி கதை அதோட முடிஞ்சது....
அந்த காலத்துல... 1947 ல... ச்சே... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... பயந்துராதீங்க.... பொங்கல் அப்படின்னா எங்க ஊரில் போட்டியெல்லாம் நடத்துவாங்க... நம்ம வழக்கம் போல அதுக்கெல்லாம் கலந்து கொள்ளுவது இல்ல... ஒரு கரும்பா தின்னுட்டு... போயி வேடிக்கை மட்டும் பாக்குறது... இல்ல ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் போயி மாலை நேர படம் பாத்துட்டு... ஒரு முறுக்கு சாப்பிட்டு.. பொங்கல முடிச்சிருவேன்...
நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது... வந்தது எல்லா வினையும்... தாய் பிள்ளையா பழகுன எல்லோரும் எதிரி ஆயிட்டாங்க... எல்லாம் இந்த பணம், ஆட்சி, அதிகாரம் பண்ணுற வேலை... அப்ப கொஞ்சம் நம்மளுக்கு தெனாவட்டு அதிகம்.. என்னடா நம்மள யாரும் கெட்ட பய்யன்னு சொல்ல மட்டேன்கிறானுக.. அப்படின்னு ஒரு எண்ணம்... கெட்ட பேரு வாங்கனும்னு பயங்கர துடிப்பு ...
அப்படித்தான் போயி கபடி பார்க்க போயிருந்தேன்... அப்ப பார்த்து யாரோ நம்ம சாதிக்காரனை அடிக்கறதா சொல்ல.. அஹா இது தாண்டா வாய்ப்புன்னு போனா... அது அவனுங்க குடும்ப சண்டை.... சரின்னு கிளம்பினால்... அதுல ஒருத்தன்... எங்க ஜாதிய பத்தி சொல்ல.. ஒரு U-Turn போடுறதுக்குள்ள.... எல்லோரும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... டேய் ... விடுங்க... நானும் அடிக்கலாம்னு பார்த்தா... பெரிய கும்பல் சேர்ந்துருசு... தனியா ஒருத்தன மாட்டினான்.. ஒரு கட்டைய எடுத்து ஒங்கினேன்... பின்னாடி இருந்து ஒரு கை.. என்ன பிடிச்சு இழுத்து போகுது... வேற யாரு எங்க அம்மா தான்... எல்லோரும் என்னையே பாக்குறாங்க... கையில பெரிய கட்டை..
மாலையில சட்டி போலீஸ் வந்து ஊரே ஒரு ரனகலமா ஆயிருச்சு... எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்து... என்னை வேற ஊருக்கு போக சொன்னாங்க... எல்லோரும் நான் அடிக்கறதா பாத்திட்டங்க... இல்ல இல்ல... அடிக்க போனத... என்ன பண்ணுறது... அடிக்க போனதுக்கு என்னை மூன்று நாட்களுக்கு ஊர் கடத்திட்டாங்க... ஹ்ம்ம் நம்ம ரவுடி கதை அதோட முடிஞ்சது....
Subscribe to:
Posts (Atom)
