Friday, August 23, 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்...!


முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம் and கதம்பம்

Thursday, December 22, 2011

Passport Office and a Lokpal

The Passport Office

I went to get the passport for my kid to PSK. They refused to grant a passport since my address and my wife address are different. Even though we both added spouse name in each other passport. And the Birth certificate has a Father and Mother name, they refused even to issue a token. We had been asked to get a new passport for my wife with my address and with that get a new passport for the Kid.

We booked a new appointment next week for my wife and my kid. When we were waiting for token to be issued, we met a another couple with same scenario. We warned them that they might NOT get the passport for the kid. They informed us that they knew somebody inside.

When they gave the documents for verification, verification guy told them that it is NOT possible. Since they knew somebody inside, the documents went inside for higher officer view. To our disbelief, they were given the token and went for further processing.

How can the rule can be so different for person to person in this country that too for the issuance of Passport? I am Speechless.

Now coming to Lokpal

Disclaimer : As like anybody support the Lokpal, I also never read what is there in Anna's Lokpal bill.

Does the Lokpal alone change the way we function? It is a problem of people than just a government officers alone. As a people, we are more corrupted than anybody else. How is it going to different from CBI which was regarded as highest investigation agency when it was started. How are we going to make sure Lokpal also does NOT go in the same way as CBI currently.

It is after all run by our own corrupted people in this country whether it is CBI or Lokpal. We get 2000 Rs per vote to elect wrong people to the office of parliament. Then we the same people tell that they are NOT good. Is it fair? As a people of this country, do we have any self respect for ourself. We fight for caste, religion, water and what NOT? It is easy for the politician/any person to divide the people of this country. India as a union is FAILED STATE. India is a democratic country is an big time JOKE.

It is always good for my health that i should NOT worry about this country and better concentrate on My me and my Family. - Thats what any common man thinks.

Saturday, June 14, 2008

தசாவதாரம் - ஒரு பார்வை

முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதினால் என்ன அப்படின்னு தோணி... எழுதுறேன்.. நல்ல எல்லாம் தெரிஞ்சவங்க தான் விமர்சனம் எழுத முடியும்... அதனால இது ஒரு பார்வை தான்.. நல்ல பார்வையா? இல்ல நொள்ள பார்வையன்னு நீங்க தான் பார்த்து சொல்லணும்...

கமலுடைய உழைப்பு நிறையவே தெரிகிறது படத்தில். எல்லாமே கமல் தான் போல... ஒரு கடினமான கதையை சாதரண மக்களுக்கு புரிகின்ற மாதிரி எடுத்ததுக்கு பாராட்ட வேண்டும். அப்புறம் அவரோட பத்து வேடங்களும் அருமை. ஆனால் அது தான் பிரச்சனையே. எல்லாம் முக முடி போட்டு விட்டு வந்த மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் பத்து வேடம் அதிகம் தான். It is distracting from the main story.

கமல் சார் உங்களுக்கு பிரமாண்டம் வேண்டாம்.. உங்களோட நடிப்பு திறமை போதும்... அது பிரமாண்டத்துக்கு பிரமாண்டம்...

தசாவதாரம் இன்னும் ஒரு ஆளவந்தான்.. முக மூடி கொள்ளைக்காரன்.

Tuesday, April 29, 2008

Feelings of India

எங்கே நான் போனாலும்
என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே..

மரணம் தான் வந்தாலும்
பூச்சண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து
இறப்பேன் பெண்ணே...

தொட்டு தொட்டு என்னை
வெற்று களி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ...

ஆறுதல் - Positive Look

இப்ப இது அ(ஆ)ப்புரசில் நேரம்.. இப்படி தான் தலைப்பு போட வேண்டி இருக்குது.. என்ன பண்ணுறது... என்னோட எல்லா பதிவையும் படிக்கும் போது.. தெரியும்.. நான் எவ்ளோ பொறுமைசாலின்னு... இப்படி தான் இந்த வருசமும்... அ(ஆ)ப்புரசில் பக்கத்த ஓப்பன் பண்ணி வச்சு... அய்யோடா என்ன பண்ணுறது.. என்ன போட்டாலும் ஒண்ணும் ஒப்பேர போறதில்ல.. அப்படின்னு... வழக்கம் போல எதாவது திட்டி எழுதலாம்னு கன்னத்துல கைய்ய வச்சுட்டு உட்காருந்தேன்... அப்ப பாத்து என்னோட கூட வேலை பாக்குறவன் வந்து... மருது... என்னதான் ஒண்ணுமே சரி இல்லன்னாலும்... எவ்ளோ கஷ்டத்துலயும்.. positive look இருக்கதுறது தான் நல்லது... அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான்... அதுக்கு அப்புறம் உட்காந்து யோசிச்ச.. அஹா இப்படி வேற இருக்கா... அப்படின்னு அ(ஆ)ப்புரசில் முடிசிட்டேன்... பொதுவா அ(ஆ)ப்புரசில் முடிச்ச உடனே நம்ம மேனேஜர்-ஏ பாத்து கோபம் வரும்... முதல் முறைய எனக்கு ஒரு confidence வந்துச்சு.....

இத மாதிரி தான்... பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் போது.. எனக்கு கொஞ்சம் கணக்கு நல்ல வரும்... ஹலோ அந்த கணக்கு இல்ல.... நான் சொல்லுறது கணக்கு பாடம்.... அத நம்பி தான் என்னோட பொறியியல் கல்லூரி கனவே இருந்துச்சு... நான் chemistry ல கொஞ்சம் வீக்... ஆமா ரெண்டு chemistry யும் தான்... முதல் நாள் chemistry க்கு நைட் பகல்னு பாரமா படிச்சுட்டு.... (எவ்ளோ தான் படிச்சாலும் அது ஊத்திருச்சு).. மறுநாள் கணக்கு பரிட்சை... மறுநாள் பன்னிரண்டு மணிக்கே தூக்கம் வந்துருச்சு... இன்னும் ஒரு மூணு chapter நான் ரிவைஸ் பண்ணவே இல்ல.... சரி காலையில எழுந்து படிக்கலாம் னு.. அம்மாவ என்னை ஐந்து மணிக்கு எழுப்ப சொன்னேன்... அம்மா என்னை எழுப்புனது ஏழு மணிக்கு.... ஒரே அடம்... அழுகை.. என்னோட கனவு எல்லாம் போச்சுன்னு... நான் இன்னிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு... அப்ப எங்க அம்மா... "ஒண்ணும் கவலை படாத ராசா... நான் தப்பு பண்ணிட்டேன்... நீ மார்க் கம்மி எடுத்தாலும்... பரவ இல்ல.. நான் உன்னை காசு குடுத்து படிக்க போடுறன்..." அப்படின்னு அனுப்பி வச்சாங்க... ஒரே முகம் வீங்கி பரிட்சை எழுத போனேன்... போன... அங்க ஒரே தெரிஞ்ச கணக்கா வந்து அதுல நூறு சதவீத மார்க் எடுதுட்டன்... எனக்கும் அப்ப தெரியும் எங்க வீட்டுல என்னை காசு குடுத்து படிக்க போட முடியாதுன்னு... ஆனாலும் அந்த பொய்யே நம்பி... அந்த ஆறுதல் வார்த்தை என்னோட வாழ்க்கைய மாத்திரிச்சு...

பொய் சில நேரங்களில் அழகு.... வாழ்க்கை திசை மாற்றி...

Monday, April 14, 2008

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

என்னதான் அரசு இனிமே தமிழ் புத்தாண்டு தை மாசம்னு சொன்னாலும்... நம்மளுக்கு எல்லாம் எப்பவுமே சித்திரை மாசம் தான் புத்தாண்டு... யாரே கேட்டு இப்படி எல்லாம் பண்ணுறாங்கன்னு தெரியல... ஊர்ல பல பிரச்சனை இருக்கும் போது இவங்களுக்கு இதுக்கும் மட்டும் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ... இது மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது...

வழக்கம் போல இன்று எல்லா கோவிலும் நிரம்பி வழிந்திருக்கும்... நானும் போனேன்... சரி இன்னும் எவ்ளோ நாள் இந்த சிகாகோ ல இருப்பன்னு தெரியாது... போயி அரோரா பாலாஜி கோவிலுக்கு போயி நல்ல பொண்ணா பாத்து கொடு.. அப்படின்னு வேண்டிட்டு... போயி நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நெனைச்சு போனேன்...

போனால் இன்னைக்கு எதோ முருகன் கல்யாணம் நடந்துட்டு இருத்துச்சு.... அப்படியே பக்தி பரவசதுல... பாத்திட்டு இருந்தேன்... சத்தியமா... நம்புங்க... அப்போது பாத்து பக்கத்துல இருந்தவரு... என்ன விசேசம் அப்படின்னு கேட்டாரு... நான் ஒரு முழி முழிச்சிட்டு... எதாவது முருகன் திருக்கல்யாணம் இருக்கும்... அப்படி இல்லன்னா... தைப்புசமா இருக்கும் அப்படின்னு உளறி விட்டான்... அந்தாளு நம்மள ஒரு மொற விட்டாரு... அஹா மாட்டிக்கிட்ட மருதுன்னு.... எஸ்கேப் அயிட்டனே...

நீங்களே சொல்லுங்க... புது வருஷம் தை மாதம் வரும் பொழுது... தை புசம் சித்திரைல வரக்கொடதா?...

நம்மள யாராலும் ஏமாத்த முடியாது!!!!! ஆமா!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!

Video Testing Enjoy

Thursday, March 27, 2008